
Check out my channel
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கோரி அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புதுச்சேரியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினமாவை தொடர்ந்து அங்கு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
இதற்கு பின்னர் இன்று தேர்தல் பரப்புரைக்காக காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்துவந்த ஜான்குமார், வெங்கடேசன் மற்றும் சட்டசபை தலைவராக இருந்து வந்த சிவகொழுந்துவின் சகோதர் ராமலிங்கமும் பாஜகவில் இணைந்தனர்.
இதனை அடுத்து சட்டப்பேரவைத் தலைவர் சிவகொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இன்று காரைக்காலுக்கு வந்த அமித் ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் அங்குள்ள சந்தைத் திடலில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘ மக்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும்.
மக்கள் நலத் திட்டங்கள் புதுச்சேரியில் போனதற்கு காரணம் நாராயணசாமி.
இங்கு காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழ்ந்துள்ளது. பொய் சொல்வதற்கான விருது தந்தால் அதனை நாராயணசாமிக்கு தர வேண்டும்.
புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும். மத்திய அரசு புதுச்சேரிக்குகொடுத்த பணத்தை காங்கிரஸ் தலைமையிடம் நாராயணசாமிதந்தார் . நமச்சிவாயம் முதல்வராக வேண்டிய நேரத்தில் நாராயணசாமி முதல்வரானது துரோகம் தானே?
பாளையங்கோட்டையில் புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது அனைத்து பெண்களுக்கும் உரிய மரியாதை, அங்கீகாரம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அளிக்கப்படும் அனைவருக்கும் கல்வியும் சுகாதாரமும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் .
கல்வித்துறைக்கான முழு அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பது தான் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது.
நாடாளுமன்றத்தில் நான் பேச முற்படும்போது மைக் ஆஃப் செய்யப்படுகிறது , பிரிட்டிசாரையே விரட்டிய இந்தியர்களுக்கு மோடியை அனுப்புவது சிரமமான விஷயம் இல்லை .
புதிய கல்விக் கொள்கைக்கான விஷயத்தில் மாணவர்கள், மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.
கல்விக்கு சம்பந்தமில்லாதவர்களிடம் கருத்து கேட்டு புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவது சரியானதாக இருக்காது என்று பேசினார்.
இன்று ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் காலை 10.24 மணிக்கு விண்ணுக்கு சென்றது.
இதனை அடுத்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரேசில் பிரேசில் வடிவமைத்த அந்த நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ மகிழ்ச்சிகொள்கிறது இதன் மூலம் இந்தியாவும், இஸ்ரோவும் பெருமை கொள்கிறது. இஸ்ரோ குழுவிற்கு எனது பாராட்டுகள் என்றார்.
மி்ன்னஞ்சல் bhairavimassmedia@gmail.com
இன்று மன்கீ பாத் உரையை பிரதமர் மோடி நிகழ்த்தினர்.
74 வது முறையாக தனது உரையை தொடர்ந்த அவர் இளைஞர்களிடம் தற்போது புது மாற்றத்தை உணர முடிகிறது.
இளைஞர்கள் இந்திய அறிவியலின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் வருகிற மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவதால், அடுத்த 4 மாதங்களுக்கு நீரை சேமிக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்.
நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருக்கும்போது நாம் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை . என்று பேசினார்.
தமிழ்மொழியை கற்கும் முயற்சியில் நான் வெற்றிபெறவில்லை என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 4ம் தேதி அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா நடக்கிறது . இதனை முன்னிட்டு அந்த மாவட்டத்திற்கு 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்
அதிமுகவை கருவியாகப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க முயற்சிக்கிறது, என வலது கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதிய ளிப்பு மற்றும் பிரச்சார துவக்க மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.
அப்போது பேசிய பிரகாஷ் காரத்
‘‘ஆர்எஸ்எஸ் சின்., கட்டுப் பாட்டில் மத்திய அரசு உள்ளது. இந்த அரசு உண்மையான குடியரசை மாற்ற நினைக் கிறது .
சமூகவலைத் தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறது. அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத் துள்ளது .
அதிமுக அரசு வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்தது . இந்த சட்டங்களுக்கு எதிராககேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
பெரும்முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது .
தமிழகத்தில் பா.ஜ கவுக்கு ஆதரவு இல்லை என்பதால் அதிமுகவைப் பயன்படுத்தி காலூன்ற முயற்சிக்கிறது அக்கட்சி.
அதிமுகவிற்கும் நமக்கும் நேரடி போட்டி கிடையாது . நேரடி போட்டிபா.ஜ வுடன் தான்’’. என்றார்.
இறைவனின் சந்நிதியில் ...இளையராஜா..
மத்திய அரசு சமூக வலை தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து,அரசு கூறியுள்ளதாவது ‘‘ அவசர காலங்களின்போது, டிஜிட்டல் ஊடகங்களில் செய்திகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகளின்படி, இந்தக் கட்டுப்பாடு, 2009ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
அதன்படி, இதற்கான உத்தரவுகளை தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், பிறப்பிக்க முடியும்.இந்த விதிகளை, செய்தி, ஒலிபரப்புத் துறை தற்போது, செயல்படுத்த உள்ளது.
அதனால், ஒலிபரப்புத் துறை செயலருக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம், மாற்றப்பட்டுள்ளது. இதில்
புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை ,ஏற்கனவே உள்ள விதிகள் தான் தொடர்கிறது. .இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கடந்த, 25ம் தேதி, அறிக்கை வெளியிட்டனர்.
’'ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பகுதிகளில் அமைந்துள்ள, சர்வதேச எல்லை கோட்டிற்கு அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடந்து கொள்வோம்' ’என அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை , அமெரிக்க வெளியுறவு துறைக்கான நிலைகுழு தலைவர், கிரிகோரி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கடந்த, 25ம் தேதி, அறிக்கை வெளியிட்டனர்.
’'ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பகுதிகளில் அமைந்துள்ள, சர்வதேச எல்லை கோட்டிற்கு அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடந்து கொள்வோம்' ’என அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை , அமெரிக்க வெளியுறவு துறைக்கான நிலைகுழு தலைவர், கிரிகோரி மீக்ஸ் வரவேற்று கூறியதாவது:
‘‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றுவது குறித்த அறிவிப்பை, வரவேற்கிறேன். இந்த முயற்சியால், எல்லை பகுதியில் நிலவும் பதற்றம் தனியும் என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.
ஹைட்டியின் தலைநகர் போர்ட் - ஓ - பிரின்சில், சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், 25 பேர் பலியானதுடன், 400 கைதிகள் தப்பினர்.
கரீபிய தீவு நாடான ஹைட்டியின் தலைநகர் போர்ட் - ஓ - பிரின்சி சிறையில், கடந்த, 25ம் தேதி கைதிகளிடையே கலவரம் ஏற்பட்டது.
இதனை அடக்க முயன்ற, சிறை இயக்குனர் உட்பட ஆறு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
முடிவில், 25 பேர் இறந்தனர் ,400 கைதிக
ஹைட்டியின் தலைநகர் போர்ட் - ஓ - பிரின்சில், சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், 25 பேர் பலியானதுடன், 400 கைதிகள் தப்பினர்.
கரீபிய தீவு நாடான ஹைட்டியின் தலைநகர் போர்ட் - ஓ - பிரின்சி சிறையில், கடந்த, 25ம் தேதி கைதிகளிடையே கலவரம் ஏற்பட்டது.
இதனை அடக்க முயன்ற, சிறை இயக்குனர் உட்பட ஆறு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
முடிவில், 25 பேர் இறந்தனர் ,400 கைதிகள் தப்பினர்.
2019ல் பாலியல் பலாத்காரம் மற்றும் ஆள் கடத்தல் குற்றங்களுக்காக, அந்நாட்டின் பிரபல தாதா ஆர்னெல் ஜோசப், சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் கலவரம் உருவாக்கி அதன்மூலம் சிறையில் இருந்து தப்பிய ஆர்னெல் ஜோசப், வேறு ஒரு பகுதியில் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரை, போலீசார் சுட்டுக்கொன்றனர்.
உறங்க சென்றால் நான் 30 வினாடிகளில் உறங்கிவிடுவேன். தமிழக முதல்வரால் இதுபோல் உறங்க முடியுமா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைக்காக வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூத்துக்குடியில் உப்பளத்துக்குச் சென்று உப்பு உற்பத்தியை பார்வையிட்டார்.
பின்னர் ந
உறங்க சென்றால் நான் 30 வினாடிகளில் உறங்கிவிடுவேன். தமிழக முதல்வரால் இதுபோல் உறங்க முடியுமா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைக்காக வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூத்துக்குடியில் உப்பளத்துக்குச் சென்று உப்பு உற்பத்தியை பார்வையிட்டார்.
பின்னர் நெல்லையில் நாசரேத் தேவாலயம் , நெல்லையப்பர்கோயில்களில் வழிபாடு செய்தபின்னர் உரையாற்றினார்.
அப்போது '' பிரதமர் மோடியை நினைத்து பயமில்லைஎனக்கு . நான் இரவில் உறங்க சென்று படுக்கையில் படுத்தால் 30 வினாடிகளில் உறங்கிகிவிடுவேன். இதுபோல் தமிழக முதல்வரால் உறங்குவாரா?, அவரால் இரவில் உறங்க முடியாது,
அவர் நேர்மையில்லாதவராக இருப்பதால்தான், அவரால் எந்தக் கேள்வியும் பிரதமர் மோடிக்கு எதிராக கேட்க முடியவில்லை.
தனது தொலைக்காட்சி போல்தமிழகத்தைத் பிரதமர் மோடி, நினைக்கிறார். அதனால்தான் ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, தனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்கிறார்.
மத்திய அரசு தமிழகத்தைக் ரிமோட் மூலம்தான் கட்டுப்படுத்துகிறது. தேவைப்பட்டால் தொலைக்காட்சி ஒலியைக் கூட்டுகிறார், குறைக்கிறார். அதற்கு ஏற்றாற்போல் தமிழக முதல்வர் பேசுவார்.
மோடி தமிழக மக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார். ரிமோட்டிலிருந்து பேட்டரியை மக்கள் எடுக்கப்போகிறார்கள்.
நாம் நமது சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்கப்படுத்தி சீன உற்பத்திக்கு கடும் போட்டி அளிக்க வேண்டும்.
சீனாவில் இருந்துதான் செல்போன் முதல் துணிகள் வரை வருகின்றன. நமது சிறு, குறுந்தொழில்கள் மூலம் தான் இதை தடுக்கமுடியும்.இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும், வேலையில்லாத இளைஞர்களை அதிகமாகக் காண முடியும். , நம்பமுடியாத அளவில் அதிகமான உத்வேகத்துடன், சக்தியுடன், கனவுகளுடன், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்றார்.
முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய காரை நிறுத்தியதாக ஜெய்ஷ்-உல்-ஹிந்த் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
'அண்டிலா ஹவுஸ்' இது முகேஷ் அம்பானியின் மாளிகை .மும்பை பெட்டார் பகுதியில் அமைந்துள்ளது
இந்த மாளிகை அருகே கடந்த பிப்.25ல் அன்று ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய சொகுசு காரை நிறுத்தியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
அண்டிலா ஹவுஸ்சிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் சந்தேகத்தை ஏற்படுத்தியதால்
காவல்துறையுடன் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழுவும், பயங்கரவாத தடுப்புக் குழுவினரும் அங்கே சென்றுபார்த்தபோது அந்தக் காரில் ஜெலட்டின் குச்சிகள் நிரப்பபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அந்த அமைப்பு இது குறித்து டெலிகிராப்பில் ‘‘ இது வெறும் டிரைலர் தான்; மெயின் பிக்சர் இனிமேல் தான் வெளியாகும்" என எச்சரிக்கை விட்டு பணம்கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது மேலும்
'உங்களால் முடிந்தால் எங்களை நிறுத்துங்கள்' என்று சவால் விடுத்து பிட்காயின் வழியாக பணம் அனுப்பாவிட்டால் அம்பானியின் பிள்ளைகளுக்கு டார்கெட் வைக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஹசகா மாகாணத்தில் குர்திஷ் ராணுவ அணியினரின் அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமி்ல் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளவர்களின் குடும்பங்கள் தங்கியுள்ளன.
இந்த முகாமில் நேற்று 27 ம்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்குபேர் பலியாகியுள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். என்று சிரியா அரசின் செய்தித் தொடர்பு நிறுவனமான 'சனா' செய்திவெளியிட்டுள்ளது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்தில். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது: நம் நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை நாமே போட்டுக்கொள்கிறோம் என்பது மிகப்பெரிய பெருமை. நம் நாட்டு தடுப்பூசியை 50-க்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்பார்த்து காத்திருப்பது நாட்டுக்கே பெருமை. கொரோனா நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை. என்றார்.
கனடாவிலுள்ள ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமையவுள்ளது.
இதன் மூலம் தமிழ்மொழியை கற்கவும், ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இருக்கை அமைய மூன்று மில்லியன் டாலர்கள் தேவைப்பட்ட நிலையில் கனடா தமிழர்கள் 2.44 மில்லியன் டாலர்களை திரட்டி பல்கலைக்கழகத்திற்கு தந்துள்ளனர்.
இருக்கை அமைய தேவையான உபரி நிதிதேவை குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அறிந்த தமிழக அரசு தனது பங்களிப்பாக ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
உலக நாடுகள் புவி வெப்பமடைதல் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலகிற்கு பொது சிவப்பு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ள நிலையில்
அண்டார்டிகாவின் மிகப்பெரிதான பனிப்படுக்கையிலிருந்து சுமார் 1270 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மற்றும் 150 மீட்டர் தடிமன் கொண்ட லண்டன் நகரத்திற்கு இணையான பனிப்பாறை ஒன்று பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் அண்டார்டிகா பகுதியில் இருந்து இரண்டாக பிளந்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆய்வாளர்கள் இந்த பிளவை ஜிபிஎஸ் மூலம் செயற்கைக்கோளில் இருந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மொடக்குறிச்சி தொகுதிக்கான சட்டசபை உறுப்பினர் பதவிக்கு ஆளுங்கட்சி எதிர்கட்சி என இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது பிரபலதன்மையைக்கொண்டு தலைமைகளின் கவனத்தை எப்படியாவது கவர்ந்து வேட்பாளராகிவிடவேண்டும் என்ற முயற்ச்சியை மேற்கொண்டிருக்க தி.மு.க வில் கட்சிபொறுப்பில் உள்ள முக்கிய தலைவரை இந்த தொகுதியில் களம் இறக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர் கொடுமுடி ஒன்றியத்தை சேர்ந்த சில தி.மு.க வினர் .
தி.மு.க வில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவருபவர் கொடுமுடியை சேர்ந்த சுப்புலட்சுமிஜெகதீஸன். இவர் அக்கட்சியின் துணை பொதுசெயலாளராக இருந்துவருகிறார்.
தற்போது தி.மு.க வின் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு செய்துகொள்ள அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.
மொடக்குறி்ச்சிதொகுதிக்கான முன்னாள் எம்.எல்.ஏ., வாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
மொடக்குறிச்சி தொகுதியின் பிரபலங்களில் ஒருவரான இவர் இதுவரை தனிப்பட்ட முறையில் இந்ததேர்தலில் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யாமல் உள்ளார்.
இந்த நிலையில் இவர் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி அவரின் பெயரில் தொகுதிக்கான தி.மு.க வேட்பாளர்களில் ஒருவராக அவரை முன்னிருத்தி விருப்பமனுவை கொடுத்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
மேலும் இது குறித்து அவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை கட்சியின் தலைமைக்கு கொண்டு செல்லும் விதமாக தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.
அதில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட இந்த மண்ணின் மைந்தரும் விவசாயிகளின் பாதுகாவலரும், மொடக்குறிச்சி தொகுதிக்கு எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை பெற்றுத்தந்தவரும் மத்திய அமைச்சராக இருந்தபோது நெசவாளர்களின் துயரம்போக்க சென்வாட் வரியை நீக்கபாடுபட்டவரும் கொடுமுடி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான வரலாற்றுசிறப்பு மிக்க நுழைவு பாலத்தை பெற்றுத்தந்தவரும், இலங்கை தமிழர்களுக்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடியும் மனம் தளராமல் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிவருபவரும், வறட்சியின் பிடியில் கொடுமுடி பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது நமது தற்போதைய தலைவர் ஸ்டாலினை அழைந்துவந்து ஆறுதல் கூறி ஒரு லட்சம் நிவாரணம் பெற்றுத்தந்தவருமான நமது முன்னாள் அமைச்சர் செயல்திறன்மிக்க மூத்த முன்னோடியும், துணைபொதுசெயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்காக தொகுதி கழக உடன்பிறப்புகள் விண்ணப்பகட்டணம் செலுத்தியுள்ளோம்.
அவர்மேலும் பல நல்லதிட்டங்களை நமது தொகுதிக்கு கொண்டுவர அவருக்கு அனுமதி வழங்க கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். வாழ்த்துங்கள் நண்பர்களே என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க வில் விருப்பமனுவை கொடுத்துள்ள பிரபலங்களில் 46 புதூர் ஊராட்சி தலைவர் பிரகாஷ் சின்ஆதரவாளர்கள் அவர் தற்போதே எம்.எல்.ஏ., ஆகிவிட்டார் என்ற ரீதியில் அதிரடித்துக்கொண்டிருக்க.. அமைதியாக சென்றுகொண்டிருந்த தி.மு.க வில் தற்போதுதான் அதிரடி ஆரம்பித்துள்ளது.
கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்வு பட்டியலின் இறுதி முடிவு வெளியாகும் வரை இனி தினந்தோறும் தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
தமிழகத்தை காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று தேர்தல் பரப்புரையின்போது ராகுல்காந்தி பேசியுள்ளார்.
தமிழக சட்டசபைத்தேர்தல் பரப்புரைக்காக தமிழகத்துக்கு வந்துள்ளார் ராகுல்காந்தி. அவர் கன்னியாகுமரியில் பேசும்போது ’’தமிழகத்தின் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிக்கவில்லை.
மோடி செய்ய விரும்புவது என்ன ?என்பதை முன்னிலை படுத்துவதை முதன்மையாக கொண்டுள்ளார் தமிழக முதல்வ் பழனிசாமி.
தலைகுனிந்த ஒருவரால் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே வரலாறு என மோடி பேசுகிறார். தமிழ் மொழி, இந்திய மொழி இல்லையா? தமிழ் கலாசாரம், இந்திய கலாசாரங்களில் ஒன்று இல்லையா?
இதற்கான பதில் இந்த தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். தமிழகத்தின் ,நான் இருக்கிறேன் தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டை காப்பாற்ற , முதல்வராக இருந்து இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கியவர் காமராஜர். அவர் செயல்படுத்திய மதிய உணவுதிட்டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பள்ளிகளிலும் தொடர்கிறது.
மக்களை கோரிக்கைகளை கேட்டு செயல்படும் முதலமைச்சர் இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கமுடியும்’’ என்று பேசினார்.
Stream music and playlists with SoundCloud and wow your visitors with your tunes.
Follow us to watch our regular livestreams
Copyright © 2019 Newsway tamil - All Rights Reserved.
Powered by GoDaddy Website Builder